எனது வலைப்பதிவு பட்டியல்

வெள்ளி, 5 ஆகஸ்ட், 2016

வாழ்வின் முதல் பாடம்

கடலில் ஒரு முதியவரும், இளைஞன் ஒருவனும் படகு பயணம் செய்தார்கள். பெரியவர் படகினை ஓட்ட, இளைஞன் இயற்கை அழகை ரசித்துக் கொண்டு வந்தான்.

பயணம் முடிந்து திரும்பும் வழியில், இளைஞன் அந்த பெரியவரிடம் "கடற்பகுதியில் நூற்றுக்கணக்கான பாறைகள் இருந்ததே, ஆனால் எதிலும் மோதாமல் எப்படி உங்களால் படகை ஓட்ட முடிந்தது?" எனக் கேட்டான்.

அதற்கு அந்த பெரியவர், "அங்குள்ள ஒவ்வொரு பாறையையும் நான் ஏற்கனவே இடித்து பழகிவிட்டேன்" என்றார்.

நாம் யாரும் பிறந்தவுடனேயே நன்றாக பேசவோ, நடக்கவோ பழகவில்லை. அனுபவம் என்னும் முதல் பாடத்தின் வழியாகவே கற்றுவந்துள்ளோம்.

வாழ்க்கையில் ஏற்படும் ஒவ்வொரு துன்பங்களிலிருந்தும் பாடங்களைக் கற்றுக்கொள்வதோடு, அதைக் கண்டு ஓடாமல் எதிர் கொள்ளும் திறன் உள்ளவர்களுக்கே, வாழ்க்கை சிறப்பாக அமையும்.

சிலருக்கு வாழ்க்கை எளிதாக அமைந்துவிடலாம். ஆனால் உங்களுக்கு பலவித பிரச்சனைகள் ஏற்படலாம். போராடி பாருங்கள் - உங்களுக்கும் அவர்களுக்கும் உள்ள வேறுபாட்டை உணர்வீர்கள்; அவர்களும் உணர்வார்கள்.


(இதையும் படியுங்க : 19)