எனது வலைப்பதிவு பட்டியல்

வெள்ளி, 5 ஆகஸ்ட், 2016

குப்பைகளைச் சேர்க்காதீர்

அறிவியல் புரொபசர் வீட்டில் ஒரு எலி அங்கும் இங்கும் ஓடுவதைக் கண்ட மாணவன், "எலிகளை இப்படி விட்டு வைத்திருக்கிறீர்களே. இதனைப் பிடித்து அப்புறப்படுத்தக் கூடாதா?" என்று கேட்டான்.

அதற்கு அந்த புரொபசர், "எலிகள் என் புத்தகங்களை கடித்து சிதைக்கும் என்பது உண்மை தான். ஆனால், நான் அதனைப் பிடிக்க நினைத்தால் ஓடி ஒளிந்து கொள்ளும். அதை வேட்டையாடுவதிலேயே என்னுடைய வாழ்க்கை முடிந்துவிடும். மாறாக, புத்தகங்களை அலமாரியில் வைத்து பூட்டிவிட்டால், தரையில் கிடக்கும் தேவையற்ற காகிதங்களை அது தின்றுவிட்டு போய்விடும். அந்த விதத்தில், அது கடைசி வரையில் அற்ப எலியாக மட்டுமே இருக்கிறது. பெரும்பூதமாகி என் நினைவுகளை ஆக்கிரமித்துக் கொள்வதில்லை" என்றார்.

ஆனால் நாம் பல தேவையற்ற நினைவுகளையும் சிந்தனைகளையும் மனதில் வைத்துக்கொண்டு, பல்வேறு குழப்பங்களுக்கும் இன்னல்களுக்கும் ஆளாகின்றோம்.

தேவையற்றவற்ற நிகழ்வுகளை சேகரிக்கும் குப்பைத்தொட்டி இல்லை நம் மனம்.

உங்களுக்கு நேர்ந்த மகிழ்ச்சியற்ற அனுபவம் உங்களைக் காயப்படுத்திச் செல்வதும், பக்குவப்படுத்திச் செல்வதும் உங்களிடம் தான் உள்ளது.

உங்கள் நினைவுகள் பிரச்சனை அல்ல. அதை புத்திசாலித்தனமாக பயன்படுத்தாதது தான் பிரச்சனை. ஒவ்வொரு நிகழ்வையும், பதிவையும், தகவலையும் சரியாக  கையாளக் கற்றுக்கொண்டால், வாழ்க்கை மிக அழகாகத் தெரியும்.


(ஆனந்த அலை : 16)