எனது வலைப்பதிவு பட்டியல்

சனி, 20 ஆகஸ்ட், 2016

மன(ம்)நலமா?

உலகம் முழுசும் கோடிக்கணக்கான மக்கள் மனநோயால பாதிக்கப்படுறாங்க. உலகத்தில இருக்கிற, 25 சதவீத மக்களுக்கு வாழ்க்கையில ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில மனநோய் வருது. நிறைய பேர் மனச்சோர்வால (Depression) கஷ்டப்படுறாங்க. மனச்சிதைவும் (Schizophrenia) பைபோலார் டிஸாடரும் அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்தும். நிறைய பேர் மனநோயால பாதிக்கப்பட்டாலும், அந்த நோயை பத்தி வெளில சொல்றதில்ல, சிகிச்சையும் எடுக்கிறதில்ல. மக்களும் மனநோய் வந்தவங்களை ஒதுக்கி வைச்சிடுறாங்க—உலக சுகாதார அமைப்பு (WHO).

நிறைய விதமான மனநோயை குணப்படுத்த முடியும். இருந்தாலும், நிறைய பேர் அதுக்கு சிகிச்சை எடுக்கிறதில்லை. அமெரிக்காவுல, மனநோயால பாதிக்கப்பட்ட 60 சதவீத பெரியவங்களும் 50 சதவீத இளைஞர்களும் (8-15 வயசு) சிகிச்சை எடுத்துக்கிறதில்லை—நேஷ்னல் அலயன்ஸ் ஆன் மென்டல் இல்னஸ்.

மனநோய் என்பது என்ன?

 மனநோய் இருக்கிறவங்களால உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாது; சரியா யோசிக்க முடியாது; மத்தவங்களோட சகஜமா பழக முடியாது. தினம் தினம் வாழக்கையை ஓட்டுறதே அவங்களுக்கு கஷ்டமா இருக்கும்.

மனநோய் இருக்கிற எல்லாருக்கும், ஒரே மாதிரி அறிகுறிகள் இருக்காது. சிலருக்கு அந்த அறிகுறிகள் அதிகமா தெரியும், சிலருக்கு அந்தளவுக்கு தெரியாது; சிலர் ரொம்ப நாள் கஷ்டப்படுவாங்க, சிலருக்கு கொஞ்ச நாள்லயே சரியாயிடும். அவங்களுக்கு வந்திருக்கிற மனநோயை பொறுத்தும் அவங்களோட சூழ்நிலையை பொறுத்தும் அந்த அறிகுறிகள் மாறும்.

ஒருத்தர்கிட்ட கெட்ட குணங்கள் இருக்கிறதுனாலயோ, பலவீனங்கள் இருக்கிறதுனாலயோ அவருக்கு மனநோய் வரும்னு சொல்ல முடியாது.

மனநோயால பாதிக்கப்பட்டவங்க சரியான சிகிச்சை எடுக்கும்போது எல்லார் மாதிரியும் சந்தோஷமா வாழ முடியும்.