எனது வலைப்பதிவு பட்டியல்

வியாழன், 4 ஆகஸ்ட், 2016

மனதினை பகிர்வு செய்

நாம் வாழ்கின்ற வாழ்க்கை நிஜமாகவே நமக்கு பிடித்திருக்கிறதா? நமக்கு பிடித்தமான வாழ்க்கையை வாழ்வதற்கு தடையாக இருப்பது யார்? நம் எதிரிகளா? நம்மை விரும்பாதவர்களா?


இவர்கள் யாருமில்லை. நம் தயக்கம் என்னும் மனநிலை தான்.

சிலருக்கு பாடப் பிடிக்கும். சிலருக்கு ஆடப் பிடிக்கும். ஆனால் இந்த சின்ன சின்ன சந்தோஷங்களைக் கூட வெளிப்படுத்த நாம் மிகவும் தயங்குவோம். காரணம் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ? என்ற கூச்சம் தான்.

நல்ல உணர்வுகளோடு இருப்பதைவிட நல்லவனாக இருக்கவே முயல்கிறோம்.
மற்றவர்கள் கண்களுக்கு நல்லவராகத் தெரிய வேண்டும் என்பதற்காக, நம் சந்தோஷங்களைப் பலி கொடுக்கிறோம்.

நீங்கள் உள்ளார்ந்த அன்போடு உங்கள் குடும்பத்தையும் நண்பர்களையும் நேசிக்கிறீர்களா?

உங்களை சுற்றியுள்ளவர்கள், உங்களால் பல சங்கடங்களை சந்திப்பதாக நீங்கள் எண்ணி இருக்கலாம். ஆனால் எத்தனை முறை அவர்களிடம் உங்கள் எண்ணங்களையும், உணர்வுகளையும் பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள்?

தயக்கம் என்னும் திரையை விலக்கி உங்கள் அன்பையும், நன்றியையும் வெளிப்படுத்துங்கள். இது பல மாற்றங்களை உங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்தும்.


(ஓ! வாழ்க்கையே ரிலாக்ஸ் ப்ளீஸ் : 23)