எனது வலைப்பதிவு பட்டியல்

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2016

சிரிக்கப் பழகுவோம்

"இன்னைக்கு நிறையவே சிரிச்சுட்டேன். நாளைக்கு எதாவது  மோசமா நடக்காமல் இருந்தால் சரிதான்"

இப்படி சிரிக்கும் போதெல்லாம் நினைப்பவர்கள் பத்தில் ஐந்து பேர் இருப்பார்கள். இதற்கு கட்டுப்பட்டே சந்தோஷத்தை முழுதாக அனுபவிக்கத் தயங்குபவர்கள் பலர்.

ஆனால் கஷ்டம் வரும்போது நாளை வரவிருக்கும் சந்தோஷத்தைப் பற்றி நினைப்பதில்லை.

வரப்போகிற துன்பத்தை நம்மால் தடுக்க முடியாது என்றால் சிரிக்கும் நேரத்தில் கவலையின்றி ரசித்து சிரிக்கலாமே!

குழந்தைகள் பசித்தால் அழுவார்கள்; யாராவது விளையாட்டு காட்டினால் சிரிப்பார்கள். அவர்களுக்கு அழுகை, சிரிப்பு இரண்டும் ஒன்றுதான். விரும்பி அழுவதும் இல்லை; ரசித்து சிரிப்பதும் இல்லை.

உண்மையில் பார்த்தால் நம் அக்கறை சிரிக்கக் கூடாது என்பதில் இல்லை; அழக்கூடாது என்ற அச்சத்தின் மீதுதான் இருக்கிறது.

"இந்த உலகத்தில் சந்தோஷங்கள் கொட்டிக் கிடக்கிறது. ஆனால் அனுபவிக்கும் நிலையில் மனிதர்கள் இல்லை" என்கிறது சீனப் பழமொழி. துன்பங்களை தேடிக் கண்டுபிடித்து கவலைப்படத் தெரிந்த நமக்கு, கண்களுக்கு எதிரே உள்ள சந்தோஷங்களைப் பார்க்கத் தெரிவதில்லை.

சிரிப்பு வந்தால் சிரியுங்கள். நாளை அழுகை வந்தால் அழுது கொள்ளளாம். கொஞ்சமாக சிரித்து... கொஞ்சமாக அழுவதை விட, நிறைய சிரித்து... நிறைய அழப் பழகலாமே...


(ப்ளீஸ்! இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க)