எனது வலைப்பதிவு பட்டியல்

சனி, 6 ஆகஸ்ட், 2016

கடவுள் பாதி... மிருகம் பாதி

வன்முறையாளர்களுக்கும் சாமானியர்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு மிகச் சிறியது. அதாவது கொடூரமான தீய எண்ணங்கள் இல்லாத ஒரு மனிதனை யாராலும் பார்க்க முடியாது.

உங்களிடம் ஒரு ரிமோட் இருக்கிறது. அதன் பட்டனை அழுத்தினால், உங்களுக்கு பிடிக்காத ஒருவர் இயற்கையாகவே இறந்துவிடுவார். அவர் உங்களுக்கு பிடிக்காத மேலதிகாரியாக இருக்கலாம்; தரக்குறைவாக நடத்தும் உறவினர்கள் அல்லது வேண்டாதவர்களாகக் கூட இருக்கலாம்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் நீங்கள் என்ன செய்வீர்கள்?

அதீத கோபத்தால், கொலை செய்யும் அளவிற்கு போகாவிட்டாலும்,
பல்லைக் கடித்துக் கொண்டு அமைதி காப்பீர்கள் என்பதுதான் உண்மை.

மனோதாத்துவ மேதை சிக்மண்ட் ப்ராய்டு "எல்லா மனிதர்களுக்கும் வன்முறை எண்ணங்கள் புதைந்திருக்கும். அதை கட்டுப்படுத்துவது சமுதாய கோட்பாடுகளும், சட்ட திருத்தங்களும், குற்ற உணர்ச்சிகளும் தான்" என்கிறார்.

மொத்தத்தில் நாம் நல்லவர்களும் அல்ல; கெட்டவர்களும் அல்ல. வெளியே மனிதன், உள்ளே மிருகம்...


(மனிதனுக்குள் மிருகம்)