எனது வலைப்பதிவு பட்டியல்

செவ்வாய், 30 நவம்பர், 2021

👶 சாப்பிட்ட 🍒

 👩🏻 ஒருமுறை செக்கச்செவேல் என்று பழுத்திருந்த 🍒 பழங்களை வாங்கினாள். 👩🏻 நான்கு 👶. கோபு 🧒🏻,பாபு 🧒,சிட்டு👶🏼, பட்டு 👶 என்று அவர்களுக்குப் பெயர். 👬👭 🍛 சாப்பிட்ட பிறகு 🍒 தரலாம் என்று 👩🏻 நினைத்தாள்.

🍒 மேஜைமீது ஒரு 🍽 இருந்தன. 👶 இதுவரை 🍒 பழத்தைச் சாப்பிட்டதேயில்லை. 🤤 அவற்றை வாசனை பார்த்தாள். அந்த வாசனை 👶 மிகவும் பிடித்திருந்தது. 🍒 தின்று பார்த்துவிட வேண்டும் என்ற ஆசை  உண்டாயிற்று.

அறையில் யாருமில்லாதபோது ஒரு 🍒 எடுத்துத் தின்றுவிட்டாள். எல்லோரும் சாப்பிட்ட பின்பு 👩🏻 பழங்களை எண்ணிப் பார்த்தாள். ☝️ குறைந்தது.

“டியர் 👬👭,☝️ 🍒 பழம் குறைகிறது. யாராவது சாப்பிட்டீர்களா?” என்று 👭👬 பார்த்துக் கேட்டாள்.

“நான் இல்லை”, “நான் இல்லை” என்று எல்லோரும் சொன்னார்கள். 👶 அவர்களோடு சேர்ந்து “நான் தின்னவில்லை” என்று சொன்னாள்.

“சரி……..யார் சாப்பிட்டிருந்தாலும் பரவாயில்லை. ஆனால், 🍒 பழத்தில் கொட்டை இருக்கும். சாப்பிடத் தெரியாமல் அந்தக் கொட்டையையும் சேர்த்து சாப்பிட்டால் வயிற்றில் பெரியதாக 🍒 🌴 முளைத்துவிடும். அதுதான் எனக்குப் 😨 இருக்கிறது” என்றாள் 👩🏻.

👶 பயந்துபோய், “இல்லை, நான் கொட்டையை 🚪 வெளியே எறிந்துவிட்டேன்” என்று கூறி 😭.

“பொய் சொன்னால் எப்படி மாட்டிக் கொள்கிறோம் பார்த்தாயா? இனிமேல் பொய் சொல்லக்கூடாது…” என்று 👶 சமாதானப்படுத்தினாள் 👩🏻.

திங்கள், 29 நவம்பர், 2021

🐎 ஏமாற்றிய 🐺

 அது ஒரு அடர்ந்த 🏞. அந்த 🏞 வசித்து வந்த 🐺, 🐎 சேர்ந்து ஒரு 📜 செய்து கொண்டன. அதாவது நாள்தோறும் ✌ பேரும் ஒன்றாகவே சேர்ந்து இரைதேடச் செல்ல வேண்டும் என்றும், ✌ பேரில் யாருக்கு என்ன ஆபத்து ஏற்பட்டாலும், மற்றவர் ஆபத்தை விலக்கப் போராடுவது என்றும் அந்த 📜 மூலம் 🤝 செய்து கொண்டன.

ஒருநாள் 🐺, தன் நண்பனான 🐎 இரை தேடுவதற்கு அழைத்துச் செல்வதற்காக 🐎 இருப்பிடத்தை நோக்கிச் அந்த அடர்ந்த 🏞 வழியே சென்று கொண்டிருந்தது. சிறிது தூரம் சென்றதும், 🦁 ஒன்று அந்த 🐺 வழி மறித்தது. 🦁 கண்டு அந்த 🐺 நடுங்கியது. எப்படியாவது உயிர்தப்ப வழியுண்டா என 🤔.

🐺 உடனே 🦁 நோக்கி, "🤴! அற்பப் பிராணியாகிய என்னைக் கடித்துத் தின்பதால் உங்கள் பசி சற்றும் அடங்கப் போவதில்லை. உங்களுக்கு நான் மாற்று ஏற்பாடு ஒன்றைச் செய்ய முடியும். என் நண்பனாக, 🐎 ஒன்று இருக்கிறது. அதை நீங்கள் சிரமமில்லாமல் பிடித்துக் கொள்வதற்கு ஓர் ஏற்பாட்டைச் செய்கிறேன். அந்தக் 🐎, இரண்டு மூன்று 📆 உங்கள் உணவுக்கு ஆகும்!" என்று கூறிற்று.

அந்த ஏற்பாட்டுக்கு 🦁 ஒப்புக் கொண்டது. 🐺, 🦁 ஓரிடத்தில் மறைவாக இருக்குமாறு கூறிவிட்டு 🐎 இருப்பிடத்திற்குச் சென்றது.

"நண்பனே! இரை தேடச் செல்லலாமா?'' என, 🐎 அழைத்துக்கொண்டு 🦁 மறைந்திருந்த இடத்திற்கு வந்தது.

🐎, 🦁 மறைந்திருக்கும் இடத்திற்கு அருகாமையில் கொண்டு வந்து நிறுத்தியது 🐺. 🦁, 🐎 மீது பாய்ந்து அதைக் கொன்றது. பிறகு 🦁, 🐺 மீதும் பாய்ந்து பிடித்துக் கொண்டது.

🐺 பதறிப் போய், "🤴! எனக்குப் பதிலாகத் தானே 🐎 காண்பிக்க வந்தேன். இப்போது என்னையே கொல்ல வந்து விட்டீர்களே!'' என்று நரி 😨 கேட்டது.

"நெருக்கமான நண்பனையே காட்டிக் கொடுக்கத் தயங்காத உன்னை நம்ப முடியாது. நாளை நீ உயிர் தப்புவதற்காக 💪 வாய்ந்த ஒரு விலங்கிடம் என்னைக் காட்டிக் கொடுக்க மாட்டாய் என்பது என்ன நிச்சயம்? ஆகவே, உன்னை உயிருடன் விட்டு வைக்கக்கூடாது'' என்று கூறிக் கொண்டே 🦁, 🐺 கொன்று வீழ்த்தியது.

நீதி: கெட்ட நண்பர்களுடன் சகவாசம் வைத்துக்கொள்ளக் கூடாது. அவர்களால் உங்களுக்கு 👿 தான் ஏற்படும்.

ஞாயிறு, 28 நவம்பர், 2021

👨🏻 கொடுத்த 🥚

  ஒரு நாள் 👨🏻, இரண்டு 🍲 சமைத்து மேஜை மேல் வைத்தார். ஒரு 🍲 மேலே ஒரு 🥚. அடுத்த 🍲 மேலே 🥚 இல்லை.

👨🏻 👦 "உனக்கு இந்த ✌ எது வேண்டுமோ எடுத்துக் கொள்" என்றார். 👦 🥚 இருந்த 🍲 எடுத்துக் கொண்டேன். என்னுடைய புத்திசாலித் தனமான முடிவுக்காக என்னை நானே 👏 கொண்டேன்.

👨🏻 சாப்பிட ஆரம்பித்த போது எனக்கு 😱. அவருடைய 🍲 அடியில் 🥚🥚. அவசரப்பட்டு 👦 எடுத்த முடிவுக்காக வருத்தப் பட்டேன். 👨🏻 மென்மையாகச் 🙂 சொன்னார். "ஒன்றை நினைவில் வைத்துக் கொள். உன் 👀 பார்ப்பது உண்மை இல்லாமல் போகலாம்".

அடுத்த நாளும் ✌ பெரிய 🍲 சமைத்துச் சாப்பாட்டு மேசையில் வைத்தார். முதல் நாளைப் போலவே ஒரு 🍲 ஒரு 🥚 இருந்தது. இன்னும் ஒன்றில் இல்லை. அப்பா என்னிடம், "உனக்கு இந்த ✌ எது வேண்டுமோ... நீயே எடுத்துக் கொள்"

இந்த முறை 👦 கொஞ்சம் புத்திசாலித் தனமாக 🤔. 🥚 வைக்கப் படாத 🍲 எடுத்துக் கொண்டேன். அன்றைக்கும் எனக்கு 😱. 🍲 அடி வரை துழாவிப் பார்த்தும் ஒரு 🥚 கூடக் கிடைக்கவில்லை. அன்றைக்கும் அப்பா 🙂 சொன்னார்.

"எப்போதும் அனுபவங்களின் அடிப்படையில் எதையும் நம்பக் கூடாது. ஏன் என்றால் சில ⏰ வாழ்க்கை உன்னை ஏமாற்றக் கூடும். இதை ஒரு பாடமாக எடுத்துக் கொள்".

மூன்றாவது நாள். மறுபடியும் 🍲 சமைத்து மேஜையின் மேல் வைத்தார். வழக்கம் போல ஒரு 🍲 🥚. மற்றொன்றில் இல்லை.

👨🏻 மீண்டும் `நீயே தேர்ந்து எடுத்துக் கொள்’ என்றார். இந்த முறை அவசரப்பட்டு 🍲 எடுக்காமல் பொறுமையாக அவரிடம் சொன்னேன்.

`👨🏻 நீங்கள் தான் இந்தக் குடும்பத்தின் தலைவர். நீங்கள் தான் நம் 👨‍👩‍👦‍👦 உழைக்கிறீர்கள். எனவே முதலில் நீங்கள் 🍲 எடுத்துக் கொள்ளுங்கள். மற்றதை நான் எடுத்துக் கொள்கிறேன்’ என்றேன். அவர் 🥚 இருந்த 🍲 எடுத்துக் கொண்டார். 👦 🥚 இல்லாத 🍲 சாப்பிட ஆரம்பித்தேன்.

அன்றைக்கும் எனக்கு 😱. என் 🍲 அடியில் 🥚🥚 இருந்தன. 👨🏻 என்னைப் பார்த்துச் சொன்னார்.

"நினைவில் வைத்துக் கொள். மற்றவர்களுக்கு நீ நல்லது நினைக்கும் போது எல்லாம் உனக்கும் நல்லதே நடக்கும்!"


 நீதி : அடுத்தவர்களுக்கு நல்லது நினையுங்கள். உங்களுக்கும் நல்லதே நடக்கும்!!!

சனி, 27 நவம்பர், 2021

பறவையா?? விலங்கா??

 ஒரு காட்டில் வாழும் விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் திடீரென ஒருநாள் காடு யாருக்குச் சொந்தம் என்கிற பிரச்சினை உருவானது. ‘காலம் காலமாக மரங்களில் நாங்கள் கூடுகட்டி வாழ்கிறோம். அதனால் காடு எங்களுடையது’ என்றன பறவைகள்.

விலங்குகளோ ‘இது நாங்கள் பிறந்த இடம். காட்டினை நம்பியே நாங்கள் வாழ்கிறோம். ஆகவே காடு எங்களுடையது!’ என்றன. இதனால் சண்டை உருவானது. ஒன்றையொன்று தாக்கிக் கொண்டன.

பறவைகள் தங்கள் பக்கம் சண்டையிட வருமாறு வவ்வாலை அழைத்தன. வவ்வாலுக்கு அதில் விருப்பமில்லை. அது சுகமாக பழங்களைத் தின்றபடியே ‘எனக்கு கண் வலி. இல்லாவிட்டால் நிச்சயம் உங்களுக்காக சண்டைபோட வருவேன்’ என்றது. ‘நன்றி நண்பனே..!’ என பறவைகள் விடைபெற்றன.


சண்டையில் விலங்குகள் ஜெயிப்பது போன்ற சூழல் உருவானது. ஒருவேளை விலங்குகள் ஜெயித்துவிட்டால் பறவைகளைக் காட்டைவிட்டு வெளியேற்றிவிடுவார்கள். அதற்கு முன்பாக நாம் விலங்குகளுடன் சேர்ந்துகொண்டுவிட வேண்டும் என்று வவ்வால் யோசித்தது.

உடனே விலங்குகளின் கூட்டணியில் தன்னை இணைத்துக் கொள்ளும்படி கேட்டது. ‘நீ ஒரு பறவை. உன்னை சேர்த்துக்கொள்ள முடியாது!’ என்றன விலங்குகள்.

‘இல்லை! சிறகுகள் இருந்தாலும் நான் பறவை இனமில்லை. குட்டி போட்டு பால் தருவதால் நானும் விலங்கினமே..’ என்றது வவ்வால். விலங்குகளும் வவ்வாலை தங்கள் பக்கம் சேர்த்துக் கொண்டன. உடனே வவ்வால் சொன்னது: ‘பறவைகளின் பலவீனம் பசி. தானியத்தைக் காட்டி பறவைகளை எளிதாகப் பிடித்துவிடலாம். பறவைகள் குடிக்கும் நீரில் விஷத்தைக் கலந்துவிட்டால் அவற்றை மொத்தமாகக் கொன்றுவிடலாம்!’

இதைக் கேட்ட விலங்குகள் ஆரவாரம் செய்தன. சண்டை தொடர்ந்தது. திடீரென பறவைகள் பக்கம் ஜெயிப்பது போன்ற சூழல் உருவானது. உடனே வவ்வால் பறவைகளிடம் வந்து சேர்ந்தது.

‘சகோதரா! நான் குட்டிப் போட்டு பாலூட்டினாலும் நான் விலங்கினமில்லை. நான் உங்களைப் போல பறப்பவன். விலங்குகள் என்னை மிரட்டியதால் இதுவரையில் அவர்கள் பக்கம் இருந்தேன்!’ என்றது.

இப்போது வவ்வாலைப் பறவைகள் தங்கள் அணியில் சேர்த்துக்கொண்டன. ‘விலங்குகள் நெருப்புக்கு பயந்தவை. காட்டுக்கு தீ வைத்துவிட்டால் விலங்குகள் மொத்தமாக அழிந்துவிடும். மிருகங்களுக்கு அறிவு கிடையாது. பறவைகள்தான் புத்திசாலிகள்..’ என்றது வவ்வால். அதைக் கேட்டு பறவைகள் மகிழ்ச்சியில் சிறகடித்தன. சண்டை தொடர்ந்தது. 

முடிவில் கடவுள் தலையிடவே சமாதானம் ஏற்பட்டது. ‘காடு அனைவருக்கும் சொந்தமானது. மின்மினிப் பூச்சிகள் அழிந்துபோனால்கூட காடு அழியத் தொடங்கி விடும். காட்டில் எவரும் பெரியவரும் இல்லை; எவரும் சிறியவரும் இல்லை’ என கடவுள் அறிவித்தார். அதன்படி பறவைகளும் விலங்குகளும் இணைந்து வாழ்வதற்கு சம்மதித்தன.

பறவைகளும் விலங்குகளும் ஒன்றுகூடி கடவுளிடம் தெரிவித்தன: ‘சுயநலத்தோடு இனத்தை காட்டிக் கொடுத்த வவ்வாலுக்கு இனி காட்டில் இடம் தரமுடியாது. இடிந்த கட்டிடங்களில் இருட்டில் தலைகீழாகத் தொங்கி வாழட்டும்!’

அதைக் கேட்ட கடவுள் சொன்னார்: ‘துரோகிக்கு இதுதான் சரியான தண்டனை!’ விலங்குகளும் பறவைகளும் ஒன்றுசேர்ந்து வவ்வாலைக் காட்டை விட்டு வெளியே துரத்தின.


கடவுள் துரோகிகளை ஒருபோதும் மன்னிப்பதில்லை. அத்துடன் துரோகத்துக்குத் துணை போனவர்களையும் அடையாளம் காட்ட மறப்பதில்லை என்பதை வலியுறுத்தும் பர்மீய மக்களின் நாட்டுப்புறக் கதை இது.



🤴 கட்டிய 🕍

 ஒரு 🤴 தன் நாட்டில் மிகப் பெரிய 🕍 ஒன்றைக் கட்டினான். அதன் கோபுரத்தை 🎖 வேய்ந்தான். அத்தகைய சிறப்புமிக்க 🕍 கும்பாபிஷேகம் செய்ய 📆 குறிக்கப்பட்டது.

🤴 ஒரு ஆசை எழுந்தது. ‘இத்தனை பெரிய 🎖 வேய்ந்த 🕍 வெறும் 💧 ஊற்றியா குடமுழுக்கு செய்வது?’ எனவே முழுக்க முழுக்க 🥛 ஊற்றிக் குடமுழுக்கு செய்யலாம்' என்று எண்ணினான்.

உடனே நாடு முழுவதும் 🥁 போடச் செய்தான்: “🤴 கட்டியுள்ள 🕍 குடமுழுக்கு செய்வதற்கு நிறைய 🥛 தேவை, நாட்டு மக்கள் அனைவரும் 👨‍👩‍👦‍👦 ஒரு 🥛 கொண்டு வந்து தர வேண்டும்…”

மக்கள் 🥛 கொண்டு வந்து கொட்டுவதற்காக 🏛 வாயில்முன் இரண்டு பெரிய ⚱️வைக்கப்பட்டன. அவற்றைக் காவல் காக்க 🤺, 🥛 கொடுப்போரைக் கணக்கெடுக்க அரசு அலுவலர்களும் நியமிக்கப்பட்டனர்.

⚱️ உயரமாக இருந்ததால் மக்கள் அவற்றுள் பாலை ஊற்ற இரண்டு 🧗‍♂️ அமைக்கப்பட்டிருந்தன.

மக்களும் அரசனது ஆணையை ஏற்று 👨‍👩‍👦‍👦 வந்து ⚱️ ஊற்றிச் சென்றனர். அரசு அலுவலர்கள் அவ்வாறு ஊற்றுவோரின் பெயரை ✍️ கொண்டனர்.

சோமு என்ற 👦 சிந்தித்தான், ‘அனைவரும் 🥛 கொட்டுகின்றனர். நான் சொம்பில் 💧 கொண்டு போய்க் கொட்டினால் என்ன? ⚱️ நிறைய 🥛 ஒரு சொம்பு 💧 கலந்தால் தெரிந்துவிடுமா என்ன? ⚱️ உயரமாக இருக்கிறது. காவல் புரியும் 🤺 தரையில்தான் நிற்கின்றனர். நான் ஊற்றுகிறேன் என்று 🔊 வைத்துத் தெரிந்துகொள்வார்களே அன்றி, 🥛 ஊற்றுகின்றேனா 💧 ஊற்றுகின்றேனா என்று எப்படித் தெரியும்?’

இவ்வாறு எண்ணி அவன் ஒரு சொம்பில் 💧 கொண்டு சென்று ஊற்றிவிட்டு வந்தான்.

குடமுழுக்கிற்காகக் குறித்த 📅 வேள்வி முதலிய சடங்குகளையெல்லாம் முடித்துக்கொண்டு கோபுரங்களில் ஊற்ற ⚱️ இருக்கும் 🥛 கொண்டு வரும்படி 🤴 ஆணையிட்டான்.

🤺 கொண்டு வந்த ⚱️ ஒரு குடத்தைவிட்டு மொண்ட போது அதில் கலப்படமில்லாத தூய 💧 இருந்தது! ஆம். இரண்டு ⚱️ முழுக்க முழுக்க 💧 இருந்தது!

நாட்டு மக்கள் அனைவரும் சோமுவைப் போலவே எண்ணிவிட்டிருந்தனர். ’அனைவரும் 🥛 ஊற்றப் போகின்றனர், நான் மட்டும் 💧 ஊற்றினால் என்ன ஆகிவிடப் போகிறது’ என்று அனைவரும் 💧 ஊற்றியிருந்தனர்!

நீதி: ஒவ்வொரு தனி 👨 சேர்ந்தே மிகப் பெரிய சமுதாயம் உருவாகிறது. எனவே நாம் ஒவ்வொருவரும் கடமையை சரியாக செய்தால் மட்டும் 🇮🇳 நாட்டில் முன்னேற்றம் ஏற்படும்.

வெள்ளி, 26 நவம்பர், 2021

🧖‍♂️ வளர்த்த 🐶

  🧖‍♂️ ஒருவர் பயங்கரமான ஒரு காட்டில் வாழ்ந்துவந்தார். அவரோடு ஒரு 🐕 மிகுந்த ❤ இருந்தது. முனிவர் தான் உண்ட 🥕, 🍊 போக மிச்சத்தை அந்த 🐶 அளிப்பார். அதுவும் அதை மட்டுமே உண்டு உயிர் வாழ்ந்தது. 🧖‍♂️ இருந்ததால் அதற்கு 🥩 உண்ணும் ஆசை வரவில்லை.

ஒரு நாள் திடீரென ஒரு 🐆 அந்த 🐕 கண்டு அதை வேட்டையாட துரத்தியது. 🐆 கண்டு மிகுந்த 😨 கொண்ட அந்த 🐕 முனிவரிடம் வந்து தஞ்சம் அடைந்து. நடந்தவை அனைத்தையும் அறிந்த 🧖‍♂️, "பயப்படவேண்டாம். நீ என்னுடைய 👶 மாதிரி உனக்கு எந்த ஆபத்தும் நேராமல் நான் பார்த்துக்கொள்கிறேன்" என்று கூறி ஒரு மந்திரத்தை ஜபித்து தன் 🏺 உள்ள 💧 அந்த 🐕 மீது தெளித்தார். உடனே அந்த 🐕 ஒரு மிக பெரிய 🐆 மாறியது. உடனே அது தன்னை விரட்டி வந்த 🐆 விரட்டி அடித்தது.

🐆 மாறினாலும் அந்த 🐕 விசுவாசத்தோடு 🧖‍♂️ காலையே சுற்றி சுற்றி வந்துகொண்டிருந்தது. ஒரு நாள் திடீரென ஒரு 🐅 பயங்கர பசியோடு அந்த 🐆 துரத்த ஆரமித்தது. மீண்டும் என்ன செய்வதென்று தெரியாமல் 🧖‍♂️ வந்து சரணடைந்தது அந்த 🐆. உடனே அவர் மீண்டும் மந்திரத்தை ஜபித்து💧 அந்த 🐆 மீது தெளித்தார். உடனே அது பலம் பொருந்திய 🐅 மாறியது. பின் தன்னை துரத்தி வந்த 🐅 ஓட ஓட விரட்டியது.

ஆனால் இப்போது 🐅 பழைய மாதிரி 🍅 🍎 எல்லாம் உண்பது கிடையாது. 🧖‍♂️ தெரியாமல் அவ்வப்போது வேட்டைக்கு சென்று 🦒, 🐇 என எது கிடைக்கிறதோ அதை வேட்டையாடி உண்டு வந்தது. இப்படியே 📆 செல்ல ஒரு நாள் மிக பெரிய 🐘 ஒன்று அந்த 🐅 துரத்தியது. மீண்டும் அந்த 🐅 🧖‍♂️ தஞ்சம் அடைய அவர் அதை ஒரு பலம் பொருந்திய 🦁 மாற்றினார்.

காட்டிலே இது தான் 💪 பொருந்திய 🦁 என்பதால் காட்டிற்கு 🤴 என்ற கர்வத்தோடு திரிந்தது. அதோடு 🧖‍♂️ எப்போவாவது ஒருமுறை தான் வந்து பார்த்தது. மற்ற 🕰 தனக்கு பிடித்த 🦒 வேட்டையாடி கொன்று உண்டு கொண்டிருந்தது. அப்போது திடீரெனெ ஒருநாள் அந்த காட்டிற்கு வினோதமான 🦕 ஒன்று வந்தது. அந்த 🦁 விட மிக 💪 இருந்தது. அது இந்த 🦁 துரத்த ஆரமிக்க மீண்டும் அந்த 🦁 🧖‍♂️ தஞ்சம் அடைந்தது.

🧖‍♂️ மீண்டும் மந்திரத்தை ஜபித்து அந்த 🦁 சக்திவாய்ந்த 🦕 மாற்றினார். அந்த 🦕 இப்போது காட்டில் எதையுமே விட்டு வைக்காமல் அனைத்தையும் கொன்று தின்றுகொண்டிருந்தது. இந்த 🦕 வரும் 🔊 கேட்டாலே மற்ற மிருகங்கள் ஓடி ஒலிந்தன. இதற்கு 😈 தலைக்கேறியது. "நம்மை கண்டு இந்த காட்டில் அனைவருமே 🤯 நடுங்குகின்றனர். ஆனால் இந்த 🧖‍♂️ மட்டும் எப்போதும் நம்மை கண்டு 🤯 இல்லை. ஆகையால் அவரை கொல்ல வேண்டும்" என்று அந்த 🦕 தீர்மானித்தது.

ஒருநாள் 🧖‍♂️ கொல்வதற்காக அந்த 🦕 பாய்ந்து வந்தது. 🦕 நோக்கத்தை நன்கு அறிந்த முனிவர் மீண்டும் மந்திரத்தை ஜபித்து அதை ஒரு 🐕 மாற்றிவிட்டார்.


நீதி: 🌄 நமக்கு கொடுத்ததை வைத்து நாம் அதை பயனுள்ளதாக மாற்றவேண்டுமே தவிர அதை வைத்து எதையும் ☠️ நினைக்க கூடாது. 

வியாழன், 25 நவம்பர், 2021

🐇-🐌-🐢 கதை

  ஒரு காட்டில் 🐢, 🐌 நண்பர்களாய் இருந்தன. அவை இரண்டுக்கும் நீண்டகாலமாக, ஒரு மனக்குறை இருந்தது. தங்களால் வேகமாக 🚶‍♀️, தாவிக் குதித்து 🏃‍♀️ முடியவில்லை என்ற மனக்குறைதான் அது.

ஒருநாள், அவை ✌ நடந்து சென்றுகொண்டிருந்த போது, ஓர் அழகிய வெள்ளை நிற 🐇 தாவிக் குதித்து, 🏃‍♀️ வருதைக் கண்டன.

"🐇 ✋!'' என்றது 🐢.

"நீ எப்படி இவ்வளவு வேகமாய் தாவிக் குதித்து ஓடுகிறாய்?'' என்று கேட்டது 🐌.

"இது என்ன ❓ உங்களுக்கு இருப்பதுபோல், என் முதுகில் கனமான ஓடு இல்லை. அந்தச் சுமை இல்லாததால், வேகமாக ஓடுகிறேன்!'' என்று சொல்லி விட்டு, 🐇 அந்த இரண்டையும் இளக்காரமாகப் பார்த்தது

"ஓஹோ! எங்களின் வேகக் குறைவுக்கு எங்கள் ஓடுதான் காரணமா?''

"ஆமாம்! நீங்கள் உங்கள் ஓடுகளைக் கழற்றிப் போட்டுவிட்டால், என்னைப் போல் வேகமாக 🏃‍♀️. வேகமாக ஓடுவதில், ஓர் அலாதியான சுகம் இருக்கிறது தெரியுமா... அனுபவித்துப் பாருங்கள்!'' என்றது 🐇.

🐌, 🐢 அந்த இடத்திலேயே தங்கள் முதுகு ஓடுகளைக் கழற்றிப் போட்டுவிட வேண்டும் என்ற ஆவல் பிறந்தது.

அவற்றைக் கழற்ற முயன்றபோது, திடீரென 🌳 மறைவில் ஏதோ அசையும் ஓசை கேட்டது.🐢, 🐌 ஆபத்தை உணர்ந்து, தங்கள் ஓடுகளைக் கழற்றும் முயற்சியைக் கைவிட்டன.

சட்டென, 🌳 மறைவிலிருந்து ஓரு 🐺 வெளிப்பட்டு, 🐇 நோக்கிப் பாய்ந்தது. 🐢, 🐌, விருட்டென்று தங்கள் உடலை ஓடுகளுக்குள் இழுத்துக் கொண்டு, உயிர் பிழைத்தன. 🐺 🐇 பிடித்தது.

சிறிது 🕰 சென்ற பிறகு ஓடுகளை விட்டு வெளியே வந்த 🐢, 🐌 இரண்டும் 🐇 ரத்தத்தைப் பார்த்து, 🤯 போயின

தாங்கள் வேகமாய் 🏃‍♀️ விட, உயிர் பிழைத்து வாழ்வதே முக்கியமானது என்பதை உணர்ந்தன. தங்கள் எதிரியிடமிருந்து காப்பாற்றிய தங்கள் ஓடுகளுக்கு அவை 🙏 கூறின.


நீதி : நம்மிடம் இருப்பதை கொண்டு 😄 வாழக் கற்றுக் கொள்ள வேண்டும் 

புதன், 24 நவம்பர், 2021

🐍 பழிவாங்கிய 🐦

  ஒரு ஊரில் 🐦 தம்பதியினர் மிகுந்த ♥️ வாழ்ந்து வந்தனர். அவர்கள் பல 🥚 இட்டு அதனை பாதுகாத்து வந்தனர். அப்போது அந்த 🐦 வாழும் 🌲 கீழ் உள்ள பொந்தில் உள்ள 🐍 ஒன்று  🐦 இடும் 🥚 யாரும் அறியாமல் எடுத்து தன்னுடைய பசியை ஆற்றிக் கொண்டிருந்தது.

இதனால் மனம் வருந்திய 🐦 அங்கு வந்த 🐺 இது பற்றி கூறி புலம்பியது. 🐍 பசியில் இருந்து  🥚 தப்பிக்க வைக்க 🐺 ஒரு 💡 கூறியது.

மறுநாள் 🌅 பொழுதில் 🏰 பறந்தது 🐦. அங்கே 👸 தன்னுடைய 📿💍 கழற்றி வைத்து விட்டு குளித்து கொண்டிருந்தாள். அழகான 💎 பதித்த 💍 ஒன்றை தூக்கி கொண்டு பறந்தது.

👸 அலறி வீரர்களை அழைத்து 🐦 பின் தொடர சொன்னாள். 🐦 அந்த 💍 எடுத்துச் சென்று 🐍 இருந்த பொந்தில்  போட்டு விட்டு வேறொரு இடத்தில் போய் அமர்ந்து கொண்டது.

வீரர்கள் 💍 எடுக்க பொந்திற்குள் கைவிட்டபோது அங்கிருந்த 🐍 சீறியது. 🐍 கண்ட வீரர்கள் அதனை தங்கள் 🔪 வெட்டி கொன்றனர். அதன் பின்னர் 💍 எடுத்து சென்று 👸 ஒப்படைத்தனர்.

🐺 யோசனைப்படி செய்த 🐦, 🐍 தொல்லையில் இருந்து விடுபட்டு தன்னுடைய 👨‍👩‍👦‍👦 பல்லாண்டு காலம் 😀 வாழ்ந்தது.


நீதி : பிறருக்கு ☠️ செய்ய நினைப்பவருக்கு அதைப்போல பலமடங்கு ☠️ திரும்ப அவர்களையே வந்துசேரும்.

செவ்வாய், 23 நவம்பர், 2021

உண்மையான அழகு

அக்பர் சக்கரவர்த்திக்கு, அவரது பேரன் குர்ரத்திடம் அளவற்ற பாசம். அவனைக் கொஞ்சும் போது, அரச காரியங்களைக் கூட மறந்து விடுவார். ஒருநாள் அரசவையில், "என் பேரன் குர்ரத்தை விட, அழகான குழந்தை வேறு எங்காவது உண்டா?" என்று கேட்டார். அங்கிருந்தவர்கள், "இல்லை அரசே…" என்றனர்.

ஆனால், பீர்பல் மட்டும் பதில் கூற வில்லை. இதை கவனித்த அக்பர், "நீ ஏன், பதில் அளிக்கவில்லை?" என்று பீர்பாலிடம் கேட்டார்.

"அரசே… உங்கள் கேள்வி மிகவும் சிக்கலானது. உண்மையான
அழகை எப்படிக் கண்டு பிடிப்பது?"

"ஏன்... பார்த்தால் தெரியாதா? ஆந்தை அவலட்சணமாக இருக்கிறது. மான் அழகாக இருக்கிறது. இது கூடத் தெரியாதா?"

"அரசே… நாளைய தினம் ஆளுக்கொரு குழந்தையை எடுத்து வரச் சொல்வோம். அதிலிருந்து, அழகிய குழந்தை ஒன்றை தேர்ந்தெடுக்கலாம்…" என்றார் முல்லா.

"நீங்கள் சொல்வதும் உண்மை தான்; நாளை குழந்தைகளுக்கு அழகுப் போட்டி நடத்துவோம். ஆளுக்கொரு குழந்தையை எடுத்து வாருங்கள். அதிலிருந்து, அழகிய குழந்தை ஒன்றைத் தேர்ந்தெடுப்போம்…" என்றார், அக்பர்.


மறுநாள் அரசவை கூடியது. அரச பிரதிநிதிகள், ஆளுக்கொரு குழந்தையை
எடுத்து வந்திருந்தனர். அக்பர் சக்கரவர்த்தி எல்லா குழந்தைகளையும் பார்த்தபடியே வந்தார். எதுவுமே, அழகாக தோன்றவில்லை. அவருடைய பேரன் மட்டும் தான் அழகு என தோன்றியது.

வெறுங்கையுடன் நின்ற பீர்பாலைப் பார்த்து, "நீ அழகிய குழந்தை எதையும் எடுத்து வரவில்லையா?" என்று கேட்டார்.

"அரசே… நாட்டிலேயே அதிக அழகுள்ள குழந்தையை பார்த்தேன். அதை அரண்மனைக்குக் கூட்டிச் செல்வதாக, தாயாரிடம் கேட்ட போது, ‘மற்றவர் கண் திருஷ்டி பட்டுவிடும்’ என்று கூறி, மறுத்து
விட்டாள்…" என்றார்.

"அப்படியானால் மாறுவேடம் அணிந்து, அக்குழந்தையை பார்க்கச் செல்வோம்" என்றார் அக்பர்.

அரசருடன், அரசவை பிரதானிகளும், மாறுவேடம் அணிந்து சென்றனர். நகரத்தை விட்டு வெகுதுாரம் அழைத்து வந்தார் பீர்பால். ஒரு குடிசைப் பகுதியை அடைந்தனர்.

"என்ன பீர்பால், நீ சொன்ன அழகான குழந்தை, இந்த அவலட்சணமான
இடத்தில் தான் இருக்கிறதா?" என்று, கேட்டார் அக்பர்.

"சேற்றில் கூட செந்தாமரை பூக்கும். குப்பையில், மாணிக்கமும் இருக்கும். ஒருவேளை, பீர்பால் சொன்ன அழகுக் குழந்தையும், இங்கு இருக்கலாம்…" என்றார் ஒரு அமைச்சர். "அதோ பாருங்கள்… ஒரு குழந்தை விளையாடுகிறதே…" என்று,
துாரத்தில் ஒரு குழந்தையைக் காட்டினார், பீர்பால்.

மிக விகாரமாக ஒரு குழந்தை, புழுதியில்
விளையாடுவதை அக்பரும், மற்றவர்களும் பார்த்தனர். அப்போது, அக்குழந்தை தரையில் தடுக்கி விழுந்து, ‘ஓ…’ என, அழ ஆரம்பித்தது.



உடனே குடிசையில் இருந்து வெளியே வந்த பெண், "என் தங்கக்கட்டி, அழகு செல்லமே… இந்த குப்பை தொட்டி உன்னைத் தள்ளி விட்டதா… அதை அடிப்போம். நீ அழாதே… என் ராஜா…" என, குழந்தையை சமாதானப்படுத்தினாள்.

இதைக் கேட்ட அக்பர், "இவளுக்கென்ன பைத்தியம் பிடித்து விட்டதா? எவ்வளவு அசிங்கமாக, அவலட்சணமாக குழந்தை இருக்கிறது. இதைப் போய், அழகு என்கிறாளே…" என்றார்.

"யாரு ஐயா நீ? என் அழகு செல்வத்தை, இன்னொரு முறை அசிங்கம்ன்னு சொன்னா நாக்கை அறுத்து விடுவேன். இந்த உலகம் முழுவதும் தேடிப் பார்! என் குழந்தை மாதிரி,
அழகான ஒன்றை பார்க்க முடியாது…" என்று பொரிந்து தள்ளினாள், அக்குழந்தையின் தாய்.

மறுமொழி பேசாமல் திரும்பிய அக்பர் வழியில், "பீர்பால்! நீ கூறியது உண்மை தான். ஒவ்வொரு குழந்தையும், அதன்
பெற்றோருக்கு அழகு தான்…" என்றார்.

"பெற்றோருக்கு மட்டுமல்ல, பாட்டனார்களுக்கும்…" என்றார் பீர்பால்,
ஒரு நக்கல் சிரிப்புடன். அதன் பொருள் உணர்ந்து, சிரித்தார் பாட்டனார் அக்பர்!

அழகு என்பது, நம் பார்வை சார்ந்தது. புற அழகு மட்டும் அழகல்ல. மனதால் யாருக்கும் தீமை விளைவிக்காமல், நல்லதை மட்டுமே எண்ணும் அக அழகே முக்கியமானது. 




திங்கள், 15 நவம்பர், 2021

புத்தரின் போதனை

புத்தர் தன்னுடைய கருத்துக்களை உலகம் முழுவதும் பரப்பும் பணியில் ஈடுபட்டிருந்தார். அவர் செல்லும் இடமெல்லாம் கூட்டம் கூடியது. ஒரு சிலர் அவரது கருத்துக்களை ஏற்றுக்கொண்டனர். இன்னும் சிலர், அவரது கருத்தை ஏற்காததுடன் ஏளனமாக, அவமரியாதையாக பேசவும் செய்தனர். ஆனால் அவற்றை எல்லாம் ஒரு சிறிய புன்னகையுடன் கடந்து சென்றுவிடுவார், புத்தர்.

ஒருநாள் அவர் ஒரு ஊருக்குச் சென்றிருந்தார். அங்கு தன்னுடைய கருத்துக்களை மக்களிடம் எடுத்துரைத்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு வாலிபன், புத்தரை கடுமையான வார்த்தைகளால் திட்டினான். சாதாரணமான ஒருவன் அந்த வார்த்தைகளைக் கேட்டால், அங்கு அசம்பாவித சம்பவங்கள்தான் நிகழும். ஆனால் எதிரில் இருப்பவர் புத்தர் ஆயிற்றே.. அவரது முகத்தில் புன்னகையைத் தவிர வேறு எந்த முகபாவனையும் தென்படவில்லை.



புன்னகையோடே தன்னைத் திட்டிய வாலிபரை, தன் அருகில் வரும்படி அழைத்தார், புத்தர். ‘இவர் நம்மை என்ன செய்துவிடப்போகிறார்’ என்று நினைத்த அந்த வாலிபனும் புத்தரின் அருகில் போய் நின்றான்.

அவனை தன் பக்கத்தில் அமரும்படி சொன்னார் புத்தர். பின்னர் அவனிடம், “நண்பரே.. நீங்கள் உங்களுக்கு நெருக்கமானவரைப் பார்க்கச் செல்லும்போது, கையில் ஏதாவது எடுத்துச் செல்வீர்களா?” என்று கேட்டார்.

அதற்கு அந்த வாலிபன், “ஆமாம்.. பழங்கள் ஏதாவது வாங்கிக்கொண்டு செல்வேன்” என்று பதிலளித்தான்.

“அப்படி நீங்கள் வாங்கிச் செல்லும் பழங்களை, நீங்கள் காணச்சென்றவர் உங்களிடம் இருந்து வாங்கிக்கொள்ளவில்லை என்றால், அந்தப் பழங்களை என்ன செய்வீர்கள்?” என்றார், புத்தர்.

“நான் வாங்கிச் சென்ற பழங்களை, என்னுடனே எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்துவிடுவேன்” என்றான், அந்த வாலிபன்.

அப்போது புத்தர் அதே புன்னகையுடன் கூறினார். “அதைத்தான் இப்போது நீங்கள் செய்யப்போகிறீர்கள். திட்டுவது என்பது உங்கள் சுதந்திரம். அதை ஏற்பதும், ஏற்காததும் என்னுடைய சுதந்திரம். நீங்கள் என்னை அவமதித்துப் பேசிய பேச்சுக்களை நான் ஏற்கவில்லை. எனவே பழங்களை திரும்ப எடுத்துச் செல்வதுபோல, உங்களுடைய வசைபாடலையும் உங்களுடனேயே திரும்ப எடுத்துச் செல்லுங்கள்” என்றார்.

அதைக்கேட்ட அந்த வாலிபன் வெட்கித் தலைகுனிந்தான். தன் தவறை உணர்ந்து, உடனடியாக புத்தரின் பாதத்தை வணங்கி, மன்னிப்புக் கேட்டான். பின்னாளில் அவன் புத்தரின் கொள்கைகளை பின்பற்றும் சீடனாகவும் மாறிப்போனான்.

இன்பங்களைப் போலவே துன்பங்களும் வாழ்வில் உண்டாகும். ஆனால் இன்பங்களை மகிழ்வாக வரவேற்கும் நமக்கு, துன்பங்களை ஏற்கும் மனப்பக்குவம் இருப்பதில்லை. ஒரு சிலர் வாழ்க்கையில் ஏராளமான அவமானங் களை சந்திக்கவே செய்வார்கள். அது அவர்களின் மனதை மிகவும் பாதித்து விடுகிறது. அதனால் நிலைகுலைந்து, வாழ்வையே இழந்துவிட்டதாகக் கருதுபவர்களே இங்கு ஏராளம். இன்பங்களையும், துன்பங்களையும், மரியாதையையும், அவமரியாதையையும் சரிசமமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.