எனது வலைப்பதிவு பட்டியல்

புதன், 28 டிசம்பர், 2016

பாதுகாப்பு !!!

ஓர் அரசன் தனது பார்சி அடிமையோடு ஒரு கப்பலில் பிரயாணம் செய்துகொண்டிருந்தான். அந்த அடிமை கடலில் இதுவரை பிரயாணம் செய்தது கிடையாது. அவன் புலம்ப ரம்பித்தும் சப்தமாக ஒலமிட்டும் பயத்தால் நடுங்கவும் செய்தான்.


அவர்கள் எவ்வளவுதான் அவனை அமைதி படுத்த முயன்ற போதும் அவன் அமைதியாகவில்லை. அரசனின் பிரயாணம் கெட்டு விடும் ஒரு சூழ்நிலை உருவாகி என்ன செய்வதென எவருக்கும் தெரியாமல் இருந்தது. அப்போது கப்பலில் ஒன்றாக இருந்த ஞானி ஒருவர், ‘நீங்கள் விரும்பினால் நான் அவனை அமைதிப்படுத்துகிறேன்’ என அரசரிடம் கூறினார். 

அதற்கு அரசர், ‘மெய்யாகவே இது ஒரு கருணை மிகு செயலாகும்’ என பதிலளித்தார்.ஞானி அந்த அடிமையை தூக்கி கடலில் வீசிடுமாறு அவர்களை பணித்தார். அந்த அடிமை திக்கு முக்காடி கடல் நீரை சிறிது குடித்த பின்பு அவனது தலை முடியைப் பற்றி கப்பலை நோக்கி இழுத்தனர். 



அவன் கப்பலை தன் இரு கைகளாலும் இருகப் பற்றி, கப்பலுக்குள் வந்தவுடன் ஒரு மூலையில் அமைதியாக உட்கார்ந்திடவும் செய்தான். அரசன் ஆச்சர்யமுற்று, ‘இதில் என்ன விவேகம் அடங்கியுள்ளது?’ என வினவினான். 

அதற்கு அந்த ஞானி: ‘இந்த அடிமைக்கு நீரில் மூழ்கிப் போவது என்றால் என்னவென்று தெரியவில்லை, ஆகவே கப்பல் தரும் பாதுகாப்பை அவன் உணரவில்லை. அவ்வாறே, ஆபத்தை அனுபவித்தவனே, பாதுகாப்பின் மதிப்பறிவான்.