எனது வலைப்பதிவு பட்டியல்

சனி, 24 டிசம்பர், 2016

மனித மனம்!!!

ஒரு பிச்சைக்காரன் ரயில் நிலையத்தின் முன்பாக நின்று கொண்டிருந்தான். அவனை வழக்கமாக அங்கே பார்க்கிற ஒருவர் பரிதாபப்பட்டு அவனுக்கு உதவ நினைத்தார். 

இவன் வாழ்க்கையில் அதிகபட்சம் ஒரு ரூபாய் அல்லது 2 ரூபாய்தான் பிச்சையாகப் பெற்றிருப்பான். நாம் 100 ரூபாய் கொடுப்போம். இவன் ஏதாவது தொழில் செய்து பிச்சை எடுப்பதில் இருந்து விடுபட உதவியாய் இருக்கும் என்று நினைத்து அந்த பிச்சைக்காரனுக்கு 100 ரூபாய் கொடுத்தார்.


பிறகு அவனிடம், "ஒரு சின்ன சந்தேகம். இந்த 100 ரூபாயை வைத்து நீ என்ன செய்யப்போகிறாய்?'' எனக் கேட்டார். கொஞ்சம் கூட தயக்கமில்லாமல் அந்தப் பிச்சைக்காரன், "என் பிச்சை பாத்திரம் பழசாய்ப் போச்சு. புதிய பிச்சைப் பாத்திரம் வாங்குவேன்'' என்று சொன்னான். 

இதுதான் அவனுடைய பதில். 100 ரூபாய் பிச்சை கொடுத்தவர், இவனுக்கு லட்சரூபாய் கொடுத்தாலும் இந்த பிச்சைத் தொழிலை மாற்றிக் கொள்ளப்போவது இல்லை. இவனுக்கு தொழில் பக்தி அதிகம் என்று நினைத்துக் கொண்டு போனாராம்.

மனிதர்களின் மனோபாவத்தில் மாற்றம் இல்லை என்றால் எந்த மாறுதலும் ஏற்படப் போவதில்லை.