எனது வலைப்பதிவு பட்டியல்

சனி, 19 நவம்பர், 2016

பதவி!!!

மன்னன் ஒருவன் வேட்டையாடப் போவதற்கு முன் தனது அமைச்சரை அழைத்து ,''மழை வருமா?''எனக் கேட்டான்.
"வராது'' என்றான் அமைச்சன்.
வழியிலே ஒரு கழுதை மேல் வந்து கொண்டிருந்த குடியானவன் ஒருவன், "கொஞ்ச நேரத்தில் மழை வரும்" என எச்சரித்தான்.

அதைப் பொருட்படுத்தாமல் போன மன்னன் வேட்டை ஆடிக் கொண்டிருந்தபோது கடும் மழை வந்து நன்றாய் நனைந்து போனான். திரும்பும் வழியில் குடியானவனைச் சந்தித்து,''மழை வரும் என்று உனக்கு எப்படித் தெரியும்?'' எனக் கேட்டான்.

அவனோ,''மன்னா! எனக்குத் தெரியாது. ஆனால் என் கழுதைக்குத் தெரியும். மழை வரும் முன் அது தனது காதுகளை முன்னுக்கு நீட்டிக் கொள்ளும்'' என்றான். உடனே மன்னன் அமைச்சரைப் பதவியிலிருந்து நீக்கி விட்டு கழுதையை அமைச்சராக்கினான்.


இக்கதையை ஆபிரஹாம் லிங்கன் கூறி விட்டு, ''அதில் தான் மன்னன் ஒரு தவறு செய்து விட்டான். அது என்னவெனில் அது முதற்கொண்டு எல்லாக் கழுதைகளும் ஏதாவது பதவி வேண்டும் என அலைகின்றன'' என்றார்.

 பதவியாசை கொடூரமானது, ருசிகண்டவர்களை அது விடாது!