எனது வலைப்பதிவு பட்டியல்

திங்கள், 21 நவம்பர், 2016

பந்தயம்

முகாமுக்கு மாற்றும் போது அதிகாரி அவனிடம் ஒரு கடிதம் கொடுத்தனுப்பினார். அதில், ''இந்த கடிதத்தை கொண்டுவருபவன் கடமையில் கருத்தாக இருப்பான். ஆனால் எதெற்கெடுத்தாலும் பந்தயம் கட்டுவது தான் இவனது பலவீனம்" என எழுதியிருந்தது.


அடுத்த முகாம் அதிகாரி கடிதத்தைப் பார்த்து விட்டு, "பந்தயம் கட்டுவது கெட்ட பழக்கம். நீ எதெற்கெல்லாம் பந்தயம் கட்டுவாய்?" என்று கேட்டார்.அவன், "எதற்கு வேண்டுமானாலும் பந்தயம் கட்டுவேன். இப்போது கூட ஒரு பந்தயம். உங்கள் முதுகில் ஒரு மச்சம் இருக்கிறது என்கிறேன். பந்தயம் நூறு ரூபாய்'' என்றான். அதிகாரி, "எனக்கு முதுகில் மச்சமே கிடையாது. நீ தோற்று விட்டாய். நீயே பார்'' என்று அவர் கூறி தனது சட்டையைக் கழற்றிக் காட்டினார்.

மச்சம் இல்லாததால் அவனும் வருத்தமாக முகத்தை வைத்துக் கொண்டு நூறு ரூபாயைக் கொடுத்தான். புதிய அதிகாரி பழைய அதிகாரிக்குக் கடிதம் எழுதினார். ''அவனுக்கு சரியான பாடம் கற்பித்து விட்டேன். இனி யாரிடமும் பந்தயம் கட்ட மாட்டான்'' என்று நடந்தவற்றை விளக்கி எழுதினார்.

உடன் பதில் வந்தது.
''நீங்கள் தான் தோற்றுப் போய் விட்டீர்கள். புதிய இடத்தில் வேலைக்கு சேர்ந்த அன்றே உங்களுடைய சட்டையைக் கழற்ற வைப்பதாக என்னிடம் ஐநூறு ரூபாய் பந்தயம் கட்டிவிட்டுத்தான்
அங்கு வந்தான். வெற்றி அவனுக்குத்தான்" என அதில் எழுதியிருந்தது.

சில சமயங்களில் முட்டாள்தனம் கூட புத்திசாலித்தனமாக மாறிவிடும்.