எனது வலைப்பதிவு பட்டியல்

வெள்ளி, 18 நவம்பர், 2016

அனுபவம்!!!

ஒரு பயணி, டாக்சியில் சென்று கொண்டிருந்தார். டாக்சி ஓட்டுனரிடம் ஏதோ கேட்பதற்காக, அவன் முதுகில் லேசாகத் தட்டிக் கூப்பிட்டான்.


உடனே ஓட்டுனர் நிலை குலைந்து விட்டார். இன்னொரு காரை நெருங்கி மோதாமல் தப்பித்து,
அடுத்து வந்த ஒரு லாரியின் மீது இடிக்காமல் தப்பித்து, ஒரு மரத்தின் மீது மோதுமுன் காரை நிறுத்தினான்.

சிறிது நேரம் அங்கு மௌனம் நிலவியது. ஓட்டுனர் பயணியிடம் சொன்னார்,''என் உயிரே போகும் அளவுக்கு என்னைக் கலங்க வைத்து விட்டாயே?" என்றார்.
அந்த பயணி மன்னிப்புக் கேட்டுக்கொண்டே, "உன் முதுகில் லேசாகத் தட்டியது இவ்வளவு பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை'' என்றான்.

ஓட்டுனர், "இல்லை, இது என்னுடைய தவறுதான்.
இன்று தான் முதல்முதலாக நான் டாக்சி ஓட்டுகிறேன். கடந்த பத்தாண்டுகளாக நான் வேனில் பிணங்களைத்தான் எடுத்துப் போய்க்கொண்டிருந்தேன்" என சொன்னான்.

நமது அனுபவங்கள் கடந்த காலத்தால் பாதிக்கப்படுகின்றன.