எனது வலைப்பதிவு பட்டியல்

வியாழன், 6 அக்டோபர், 2016

தொடராதீர்கள்!!!

குரு வைத்த எல்லா கஷ்டங்களிலும் அந்த சீடன் தேறிவிட்டான். இப்போது கடைசி தீட்சை. அவன் இதிலும் தேறிவிட்டால், அவன் ஞானமடைந்தவன் என அறிவிக்கப்படுவான். குரு, "உன்னுடைய கடைசி தீட்சை மிகவும் மறைமுகமான
வழியிலேயே அளிக்கப்படும்" என கூறினார்.

சீடன் குருவின் காலை தொட்டு, "நான் தயாராக இருக்கிறேன். வெறுமனே எனக்கு கட்டளையிடுங்கள். எது செய்யப்படவேண்டுமோ அதை நான் செய்வேன்" என கூறினான்.

குரு, "நீ அரசரிடம் செல்லவேண்டும், மற்றும் அதிகாலையில் செல்லவேண்டும், அரசரை பார்க்கும் முதல் ஆளாய் நீ இருக்கவேண்டும். ஏனெனில் அரசருக்கு
ஒரு பழக்கம் உள்ளது. முதலில் வருபவர்கள் யாராக இருந்தாலும், வருபவர் எதை கேட்டாலும், அரசர் கொடுத்துவிடுவார். ஆனால் நாடு செல்வ செழிப்போடு இருப்பதால் யாராவது செல்வது மிகவும் அபூர்வம். வருடங்கள் கடந்துவிட்டன. எதை கேட்டும் யாரும் போவதில்லை. ஆனால் தவறவிட்டுவிடாதே – மிகவும் சீக்கிரமாகவே அங்கு இரு. அரசர்
காலையில் அவருடைய தோட்டத்திற்குள் நுழைவார், சூரியன் உதயமாகும்போது,  அங்கு இரு. மற்றும் அவர் உன்னை உனக்கு என்ன வேண்டும் ? என்று கேட்பார் மற்றும் உனக்கு என்ன வேண்டுமோ, அதை அவரிடம் கேள்" என கூறினார்.

இந்த கடைசி தீட்சை எந்த விதமானது
என்பதை சீடனால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் கட்டளை பின்பற்றப்படவேண்டும், அவன் சென்றான். அதிகாலை மூன்று மணிக்கு அவன் அரசருக்காக காத்திருந்தான்.
சூரியன் உதயமாகும் சமயத்தில், அரசர் தோட்டத்தில் நுழைந்தார்.


அந்த இளைஞன் அரசரை வணங்கினான். அரசர், "நீ எதையாவது கேட்பதற்காக வந்திருக்கிறாயா? நீ எதை வேண்டுமானாலும் கேட்கலாம்! நீ என்ன கேட்டாலும், நான் அதனை உனக்கு தருவேன்" என கூறினார்.

மிகப்பெரிய ஆசை இளைஞனை ஆட்கொண்டது. அவன் ஒரு ஏழை, மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்தவன், மற்றும் அரசர் எதுவாக இருந்தாலும் என்று கூறுகிறார். நிச்சயமாக தெரிந்துகொள்வதற்காக, அவன் திரும்பவும் கேட்டான்.
"எது வேண்டுமானாலும் என்று சொல்வதன் மூலம் நீங்கள் என்ன
சொல்கிறீர்கள்?"
அரசர், "எதுவாக இருந்தாலும் நீ என்னுடைய இராஜ்ஜியத்தை கேட்டால் கூட நான் அதனை உனக்கு தந்துவிடுவேன். நீ உனக்கு
எவ்வளவு பணம் வேண்டுமோ அவ்வளவு கேட்கலாம்" என கூறினார்.

ஏழை இளைஞனால் அதிகமாக
யோசிக்கமுடியவில்லை. அவன் ஒருவேளை பத்தாயிரம் ரூபாய் போதுமானது என எண்ணினான். ஆனால் ஓர் ஆசை, "ஏன் பத்தாயிரம்? உனக்கு ஒருவேளை இப்படி ஒரு வாய்ப்பு
திரும்பவும் கிடைக்காமலேயே போகலாம். ஏன் ஒரு இலட்சம் கேட்கக்கூடாது?"
மற்றும் பிறகு மற்றொரு ஆசை, மற்றும் ஆசை மேலும் ஆசை. . . ஏனெனில் மனம்
தொடர்ந்து இன்னும் இன்னும் என கேட்டுகொண்டேயிருக்கிறது. எனவே அவன் என்ன முடிவு செய்தாலும், மனம் இன்னும் அதிகமாக என்று கேட்டுகொண்டேயிருந்தது.

அரசர், "நீ கேட்பதற்கு இன்னும்
தயாராகவில்லை போல தெரிகிறது, நான் எனது காலை நடைப்பயிற்சிக்கு
செல்கிறேன். அந்த நேரத்தில் நீ முடிவு செய். மற்றும் நான் திரும்ப வரும்போது, நீ என்ன கேட்டாலும் அது உனக்குதரப்படும்" என கூறினார்.

அந்த அரை மணிநேரம் சித்ரவதையாக
இருந்தது. ஆசைகள் மற்றும் கனவுகள் விரிந்து கொண்டே போனது. அந்த அரை மணி
நேரம் மிகவும் வேகமாக போய்விட்டது. அரசர் வந்து, "இளைஞனே! நீ இன்னும் முடிவு செய்யவில்லையா?" என கேட்டார்.

பிறகு திடீரென இளைஞன், "நான் எதை கேட்டாலும் அது அரசர் வைத்திருப்பதை
விட குறைவாகவே இருக்கும், எனவே ஏன் எல்லாவற்றையும் கேட்ககூடாது?" என எண்ணினான்.

எனவே அவன், "ஐயா, நீங்கள் தர விரும்பினால், நான் எல்லாவற்றையும் உங்களிடம்
இருப்பது அனைத்தையும் கேட்கிறேன். உங்களுடைய முழு இராஜ்ஜியம், உங்களுடைய அனைத்து செல்வங்களும், உங்களுடைய மாளிகைகள் அனைத்தும் வேண்டும். நீங்கள்
வெறுமனே அரண்மனையை விட்டு வெளியேறிவிடுங்கள்! மற்றும் நீங்கள் திரும்பவும் அரண்மனைக்குள் செல்லக்கூடாது. நீங்கள் ஏதையும் எடுத்துகொள்ளக்
கூடாது. நீங்கள் வெறுமனே வெளியேறிவிடுங்கள். இராஜ்ஜியத்தைப்பற்றி எல்லாவற்றையும் மறந்துவிடுங்கள்" என்றான்.

அரசர் மண்டியிட்டு, கடவுளிடம் பிரார்த்தனை செய்ய
ஆரம்பித்தார். அவருடைய கண்களில் ஆனந்த கண்ணீர் உருண்டோடியது. அவர், "கடவுளிடம் நான் இப்படிப்பட்ட ஒரு மனிதனுக்காகத்தான்
காத்துகொண்டிருந்தேன்! ஆனால் முடிவில் என்னுடைய பிரார்த்தனைக்கு செவி சாய்த்துவிட்டீர்கள். இப்போது அவன் வந்துவிட்டான். நான் இந்த எல்லா முட்டாள் தனங்களில் இருந்தும் விடுபட்டுவிட்டேன். நன்றி! நீங்கள் என் பிரார்த்தனைக்கு செவி சாய்த்துவிட்டீர்கள். நான் நன்றியால் நிறைந்துள்ளேன்" என நன்றி கூறிக்கொண்டிருந்தார்.

அரசர் இந்த விஷயங்களை கடவுளிடம் கூறிக்கொண்டிருக்கும்பொழுது
அங்கு நின்றுகொண்டிருந்தவன், "என்ன விஷயம்? 30 வருடங்களாக என்னுடைய முழு இராஜ்ஜியத்தை ஏற்றுகொள்ளும் ஒருவனை அனுப்பு, என்னுடைய முழு இராஜ்ஜியத்தையும் கேட்கும் ஒருவனை அனுப்பு என இந்த மனிதன் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தான் என்றால், பிறகு இது எந்த மதிப்பும்
உடையது அல்ல. நான் தேவையற்ற பிரச்சனைக்குள் நுழைகிறேன்" என யோசிக்க தொடங்கினான்.

இளைஞனும் மண்டியிட்டான். அரசரின் கால்களை தொட்டு, "அரசே! நான் ஒரு
இளைஞன். தயவுசெய்து மன்னித்துவிடுங்கள். எனக்கு எதுவும் வேண்டாம். கடவுளிடம் உங்களுடைய பிரார்த்தனை, கடவுளிடம் உங்களுடைய நன்றியுணர்வு என்னுடைய முழு மனதையும் முடித்துவிட்டது.
நான் காட்டிற்கு என்னுடைய குருவிடம் திரும்பி செல்கிறேன்" என கூறினான்.

அரசர் அவனிடம் சம்மதிக்க வைக்க முயன்றார். "போகாதே, வெறுமனே பார். அரண்மனைக்குள் வா! நான் என்னுடைய அரண்மனை, என்னுடைய இராஜ்ஜியம், என்னுடைய செல்வங்கள் மட்டுமல்ல, அதோடு என்னுடைய அழகான பெண்ணையும் உனக்கு தருகிறேன், வந்து பார் !" என்றார்.

ஆனால் இளைஞன், "நான் இங்கு ஒரு நொடிகூட இருக்கமுடியாது. ஏனெனில் மனம்
என்னை ஏமாற்றிவிடலாம். ஒரு உள்ளார்ந்த புரிதல் நிகழ்ந்துவிட்டது, மற்றும் நீங்கள் கடவுளிடம் நன்றியுணர்வு கொண்டதைபோல நான் உங்களிடம் நன்றியுணர்வோடு இருக்கிறேன். நான் தெளிந்துவிட்டேன்!" என கூறினான்.

இளைஞன் தன்னுடைய குருவிடம்
சென்று நடந்த முழு கதையையும் சொன்னான். குரு, "உன்னுடைய கடைசி தீட்சை முடிந்துவிட்டது. இப்போது எதுவும் எப்போதும் உன்னை ஒரு அடிமையாக்காது. இப்போது நீ
கவனமாக, உணர்வோடு, சுதந்திரமாக இருக்கிறாய், நீ தேறிவிட்டாய். நான்
மகிழ்ச்சியடைகிறேன்.

நான் இங்கிருந்து கவனித்துகொண்டிருந்தேன். நீ முழு இராஜ்ஜியத்தையும் கேட்டபோது, என்னுடைய இதயம் அழுதது. இந்த முட்டாளிடம் 15 வருட உழைத்தது, எல்லாம் முடிந்தது என நினைத்துகொண்டிருந்தேன். ஆனால் நீ எடுத்த முடிவால் நான் அடைந்த மகிழ்ச்சியை நீ கற்பனை செய்துகூட பார்க்கமுடியாது. நீ திரும்பவும் வந்துவிட்டாய். உன்னால் அந்த விஷயத்தை பார்க்கமுடிந்தது. நீ கவனித்துகொண்டிருந்தாய்" என குரு கூறினார்.

உங்களை சுற்றியுள்ளவர்கள் மகிழ்ச்சியாக
இருக்கிறார்களா? அவர்கள் நிறைவாக இருக்கிறார்களா? அவர்கள் உங்களைவிட மகிழ்ச்சியற்று இருக்கலாம் அல்லது உங்களைவிட அதிகமாக நிறைவற்று உணரலாம். அப்படியானால் நீங்கள் அவர்களை பின்தொடராதீர்கள்.