எனது வலைப்பதிவு பட்டியல்

சனி, 22 அக்டோபர், 2016

ESP என்னும் சக்தி!!!

1977 ம் வருடத்தின் துவக்கத்தில் பங்ளாதேஷ் நாட்டிற்கு அரசியல் சுற்றுப் பயணமாகச் சென்றிருந்த பாகிஸ்தான் பிரதமர் திரு.புட்டோ அவர்கள் அங்கே மிகவும் பிரபலமாக இருந்த கிஸ்டி என்னும் மனிதரைச் சந்திக்க விரும்பினார். ஏற்பாடு செய்யப்பெற்றது. தனது பாதுகாவலர்கள் வெளியே நிற்க அவர் மட்டும் தனியாக உள்ளே சென்று கிஸ்டியின் முன் அமர்ந்தார்.

எதிரில் அமர்ந்திருப்பது சர்வ வல்லமை படைத்த ஒரு பிரதமர் என்றெல்லாம் கவலைப்படாமல் கிஸ்டி தன்னுடைய பேச்சை சாதாரணமாகத் துவக்கினார்
"மிஸ்டர், புட்டோ!"
புட்டோ உற்சாகமாகச் சொன்னார் "யெஸ்!"
அடுத்து கிஸ்டியின் வாயிலிருந்து வந்த வார்த்தை புட்டோவின் உற்சாகத்தையெல்லாம் பறிப்பதைப் போல இருந்தது.
"ஜாக்கிரதை! உங்களுக்குத் தூக்கு காத்திருக்கிறது!"

புட்டோ அதிர்ச்சியடைந்தாலும், கணத்தில் அதை மறைத்துக் கொண்டு, தொடர்ந்து சொன்னார்
"என்னைக் காப்பாற்றிக் கொள்ள எனக்குத் தெரியும். எனக்கு மூளை இருக்கிறது!"

கிஸ்டி விடமல் சொன்னார் :
"தூக்கில் தொங்கும் போது உங்கள் மூளையும் சேர்ந்துதான் தொங்கப் போகிறது"
அதற்குப் பிறகு சற்று நேரம் மரியாதை நிமித்தமாக சில நிமிடங்கள் பேசி விட்டு புட்டோ திரும்பி விட்டார்.

கிஸ்டி சொன்னது அப்படியே இரண்டு வருடங்களுக்குள் பலித்தது. 4.4.1979ம் தேதியன்று புட்டோ பரிதாபமாகத் தூக்கில் தொங்க விடப்பட்டார். அப்போது லண்டனில் படித்துக் கொண்டிருந்த புட்டோவின் மகள் பெனாசிர் பூட்டோ இதைக் கேள்வியுற்று, தன் தந்தையின் மரணத்திற்குப் பிறகு கிஸ்டியைச் சென்று சந்தித்து அழுதார்.


அப்போது கிஸ்டி அவருக்கு ஆறுதல் சொல்லியதோடு, நடக்கப்போகின்ற இரண்டு விஷயங்களைச் சொன்னார்.
"பழங்கள் வெடித்துச் சிதறும்போது - நீங்கள் பிரதமர் ஆவீர்கள்" என்றார். 

அதேபோல ஜெனரல் ஜியா சென்ற விமானத்தில் பழக்கூடையில் வைக்கப்பட்டிருந்த
வெடிகுண்டு வெடித்ததால் விமானம் விபத்துக்குள்ளானது. ஜியா அகால மரணமடைந்ததால், பெனாசிர் பிரதமரானார்.

இவை அனைத்துமே துல்லியமாக அவைகள் நடக்கும் முன்பே கிஸ்டிக்கு எப்படித் தெரிந்தது?
அதுதான் ESP யின் சக்தி!

 சாதாரண மனிதர்களுன் மூளையின் உணர்திறனுக்கு அப்பாற்பட்டவை இந்த ESP என அறியப்படுகின்றது. இந்த ESP சக்தியில் :
இறந்த காலத்தை சொல்பவர்கள்,
எதிர்காலத்தை சொல்பவர்கள்,
நிகழ்காலத்தில் நட்பபவற்றை சொல்பவர்கள்,
பெளதீக விதிகளை மீறிய செயல்களை செய்து காட்டுபவர்கள் என
இன்னும் பலவகை உள்ளது.